அனைத்துலக பெண்கள் நாள்! தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
எதிர்வரும் 09-03-2013 சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு Oxford Street (Outside Selfridges) எனும் இடத்தில் அணிதிரண்டு பின்னர் பேரணியாக இடம்பெறும் இந்நிகழ்வில் பல்லினப் பெண்கள் – அமைப்புக்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.
போரின் போதும் போருக்குப் பின்னரும், தகவல்களைப் பெறுவதற்கான, ஒரு சட்டவிரோத ஆயுதமாக, பாலியல் வல்லுறவை சிறிலங்கா ஆயுதப்படையினரும் காவல்துறையினரும், பயன்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது இலங்கைத்தீவில் தமிழ்பெண்கள் நிலைகுறித்தான சமீபத்திய ஆவணமாக நா.தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்பெண்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசினது அடக்குமுறையும் பாலியல் அத்துமீறல்களும் நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பின் ஓர் வடிவமாகவே இருக்கின்றதெனவும் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-
0 comments:
Post a Comment