தமிழீழ சுதந்திர சாசன உருவாக்கத்தில் 1 இலட்சத்து 17 ஆயிரம் பேருக்கு மேல் ஆர்வத்துடன் பங்கெடுத்து கொண்டதன் ஊடாக, தமிழீழ விடுதலையின் மீதான உறுதிப்பாட்டை தமிழ்மக்கள் மீண்டுமொரு தடவை வெளிப்படுத்தியுள்ளனர் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.



 கடந்த மே18ம் நாள் முரசறையப்பட்ட தமிழீழ சுதந்திர சாசனம் தொடர்பில் இடம்பெற்றிருந்த ஊடகநிகழ்ச்சியொன்றில் பங்கெடுத்திருந்த பொழுதே இக்கருத்தினை அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார்.